உலக பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்திற்கு இந்தியா ஒரு மில்லியன் டாலர்களை வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
பிரதமர் மோடி, “இந்த மானியம் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவி மற்றும் உலக பாரம்பரிய தளங்களை பாதுகாப்பதற்காக வழங்கப்படுகிறது. இந்த பணம் குறிப்பாக உலகளாவிய தென் நாடுகளுக்கு உதவியாக இருக்கும். இந்த யோசனையுடன், இந்தியா சர்வதேச சூரிய கூட்டணி மற்றும் மிஷன் லைஃப் போன்ற தீர்வுகளை வழங்குகிறது.”