Home செய்திகள் ‘பும்ரா, நடராஜன்’…இருவருக்கும் உள்ள ஒற்றுமை: இதனால்தான் நடராஜன் வேண்டும் என்கிறார்கள்..பிசிசிஐக்கும் இது தெரியும்!

‘பும்ரா, நடராஜன்’…இருவருக்கும் உள்ள ஒற்றுமை: இதனால்தான் நடராஜன் வேண்டும் என்கிறார்கள்..பிசிசிஐக்கும் இது தெரியும்!

பும்ரா, நடராஜன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை குறித்து தற்போது பார்க்கலாம்.

வரும் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி, கடந்த சில மாதங்களாக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்திய அணியில் பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்டது மிடில் வரிசை பேட்டர்கள் சொதப்பல்தான். தற்போது அப்பிரச்சினை முழுவதுமாக சரியாகிவிட்டு. இதனால், இந்தியா இனி தொடர்ந்து அதிரடி காட்டும் எனக் கருதப்பட்ட போதுதான் பும்ரா, ஜடேஜா இருவரும் காயம் காரணமாக அவதிப்பட்டனர். ஜடேஜாவுக்கு மாற்றாக அவரைப் போலவே செயல்படும் அக்சர் படேல் கிடைத்துவிட்டார்.

இருப்பினும் பும்ராவுக்குத்தான் சரியான மாற்று வீரர் இன்னமும் கிடைக்கவில்லை. பும்ராவுக்கு மாற்றாக முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹார் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இதுதான், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பும்ராவுக்கு சரியான மாற்று வீரர் டி நரடாஜன்தான். பும்ராவைப் போல யார்க்கர்கள், கட்டர் பந்துகள், வேகம் குறைந்த பந்துகளை அசால்ட்டாக வீசக் கூடியவராக நடரஜான் இருக்கிறார்.

இருப்பினும் பும்ராவுக்குத்தான் சரியான மாற்று வீரர் இன்னமும் கிடைக்கவில்லை. பும்ராவுக்கு மாற்றாக முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹார் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இதுதான், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பும்ராவுக்கு சரியான மாற்று வீரர் டி நரடாஜன்தான். பும்ராவைப் போல யார்க்கர்கள், கட்டர் பந்துகள், வேகம் குறைந்த பந்துகளை அசால்ட்டாக வீசக் கூடியவராக நடரஜான் இருக்கிறார்.

சிராஜ், ஷமி, தீபக் சஹார் ஆகியோர் டெத் ஓவர்களில் லெந்த், லைனை நம்பியே பந்துவீசக் கூடியவர்கள். இதனை பேட்டர்களால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். பேட்டர்கள் நகர்ந்து, முன்னால் இறங்கி வைத்து விளையாடினால் சரியான லெந்த், லைனில் பந்துவீசுவது கடினம். இதனால்தான், இவர்கள் டெத் ஓவர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கிடையாது.

Previous articleபென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு உதவும் ஆதார் கார்டு!
Next articleதீபாவளி போனஸ்… ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
அப்பாஸ் சலித்துவிட்டார்
நான் ஒரு அர்ப்பணிப்புள்ள தொழில்முறை மற்றும் விளையாட்டு செய்திகளில் ஆர்வமுள்ளவன். விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய மற்றும் முடிவுகளை பகுப்பாய்வு செய்வதில் விரிவான அனுபவத்துடன், விளையாட்டு உலகம் பற்றிய ஆழமான அறிவு எனக்கு உள்ளது. விளையாட்டு உலகில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவலை எனது வாசகர்களுக்கு வழங்குவதன் மூலம், தெளிவாகவும் சுருக்கமாகவும் தொடர்பு கொள்ளும் திறன் என்னிடம் உள்ளது. விளையாட்டு மற்றும் தகவல்தொடர்பு மீதான எனது ஆர்வம் எனது வேலையில் பிரதிபலிக்கிறது, அங்கு நான் உள்ளடக்கிய தலைப்புகளில் தனிப்பட்ட மற்றும் சுவாரஸ்யமான கண்ணோட்டத்தை எப்போதும் வழங்க முயற்சிக்கிறேன். நான் தொடர்ந்து புதிய கதைகள் மற்றும் எனது வாசகர்களை ஈடுபடுத்துவதற்கான புதிய வழிகளைத் தேடுகிறேன், அவர்கள் எப்போதும் தகவல் மற்றும் பொழுதுபோக்குடன் இருப்பதை உறுதிசெய்கிறேன்.