வங்காளத்தின் சிலிகுரியில் சரக்கு ரயிலில் மோதியதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை தடம் புரண்டதில் 8 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். சரக்கு ரயிலின் சாரதி மற்றும் கஞ்சன்ஜங்கா விரைவு வண்டியின் பாதுகாவலர் இருவரும் மோதியதில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், மனித தவறுதான் விபத்துக்கு காரணம் என, ஜெயவர்மா சின்ஹா மேலும் தெரிவித்தார். “இது சமிக்ஞை புறக்கணிப்பு வழக்கு என்று முதல் அறிகுறிகள் தெரிவிக்கின்றன,” என்று அவர் கூறினார்.