பங்களாதேஷ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, திங்கள்கிழமை மாலை 5.36 மணிக்கு டெல்லிக்கு அருகில் உள்ள காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார். அவரை விமானப்படை தளத்தில் ஏர் கமடோர் சஞ்சய் சோப்ரா வரவேற்றார்.