கடந்த ஜூலை 23ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் 22 வயது கிருத்தி குமாரியைக் கொன்றதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டார். அபிஷேக் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின் சிசிடிவி காட்சிகளில், விடுதியில் பெண் தாக்கப்பட்டதைக் காட்டுகிறது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அந்த பெண் உயிரிழந்தார். பீகாரைச் சேர்ந்த குமாரி, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.