தமிழகத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், (படம்: பேஸ்புக்/ ஆம்ஸ்ட்ராங்/பிஎஸ்பி)
அக்கட்சியின் மாநிலத் தலைவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத 6 நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே அந்த கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கட்சியின் மாநிலத் தலைவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.