பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது இந்திய பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடியை வங்கதேசத்திற்கு வருமாறு அழைக்கிறேன். நாங்கள் என்ன செய்துள்ளோம், என்ன செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை காண வங்கதேசத்திற்கு வாருங்கள்” என்று கூறினார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தியா வந்தடைந்தார். பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தவொரு அரசாங்கத் தலைவரும் இத்தகைய இருதரப்புப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.