மேற்கு வங்க சிறப்பு அதிரடிப் படை சனிக்கிழமையன்று ஷஹாதத் என்ற புதிய எல்லை தாண்டிய பயங்கரவாத தொகுதியை முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தொகுதியின் தலைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பயங்கரவாத தொகுதி, அல்-கொய்தாவுடன் இணைந்த பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட அமைப்பான ‘அன்சார் அல் இஸ்லாம்’ செயல்பாட்டாளர்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொகுதியின் தலைவர் (அமீர்) முஹம்மது ஹபிபுல்லாவை, பாஸ்சிம் பர்தமானில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழுவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் ரகசிய செய்தியிடல் தளமான ‘BiP’ மூலம் தொடர்புகொள்வது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான செயல்களை செய்யும் நோக்கத்துடன் அவர்கள் ரகசியமாக செயல்படுகிறார்கள் என்று எஸ்ஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.