ஜம்மு காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தில் இந்திய ரயில்வே வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நடத்தியது. ரியாசி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி இடையே கட்டப்பட்ட செனாப் பாலம், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு நேரடி இணைப்பை வழங்கும் இந்திய ரயில்வேயின் மெகா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கும்.