ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு ஜெயநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது மூக்கில் ரத்தம் கசிந்ததையடுத்து, அப்பல்லோ மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி அழைத்துச் செல்லப்பட்டார். பாஜக தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
செய்தி நிறுவனமான ANI பகிர்ந்த வீடியோவில், மத்திய அமைச்சர் தனது சட்டையில் இரத்தக் கறைகளைக் காணும் போது மூக்கை துணியால் மூடுவதைக் காண முடிந்தது.