ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று நாளை துவங்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கு நடைபெறவுள்ள முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதனைத் தொடர்ந்து எலிமினேஷன் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.

அடுத்து குவாலிஃபையர் 1 போட்டியில் தோற்ற அணியும், எலிமிஷேன் போட்டியில் வெற்றிபெற்ற அணியும் மோதும். இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில், குவாலிஃபையர் 1 போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் மோதும்.

இந்நிலையில் கொல்கத்தாவில் வரும் 24, 25ஆம் தேதிகள் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 1, எலிமினேஷன் ஆட்டங்கள் ஆகியவை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்கு தற்போது புயலின் தாக்கம் இருக்கிறது. இந்த புயல் காரணமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் சற்று சேதமடைந்துள்ளது. மேலும், போட்டி அன்றும் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளதால், ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒருவேளை போட்டி ரத்தானால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.