தீபாவளி என்றாலே தித்திக்கும் பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் எப்படி ஸ்வீட் சாப்பிடுவது என்பவர்களுக்காக இந்த ஐந்து விதமான ஸ்வீட் ரெசிபி.

சர்க்கரை நோயை நிர்வகிக்க இயல்பாகவே கடினமாக இருக்கும் நிலையில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் இன்னும் அரிதாக இருக்கும். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படியென்றால் இனிப்பு எப்படி சாப்பிடாமல் இருப்பது என்கிறீர்களா. இதோ உங்களுக்காகத்தான் இந்த சுவையான ஐந்து ரெசிபி . இவை குறைந்த கொழுப்பு கொண்டவையும் கூட.

​ஆப்பிள் பாதாம் ரப்டி

மிருதுவான குறைந்த கொழுப்புள்ள இனிப்பு ஆப்பிள் துண்டுகளுடன் இலவங்கப்பட்டையுடன் மென்மையாக பூசப்பட்டதோடு சுவையானது.

பாதாம் – 20 தோலுரித்து பொடியாக நறுக்கியது

டபுள் டோண்ட் மில்க்-1 லிட்டர்

ஆப்பிள் – பாதி அளவு

-ஸ்டேவியா – 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன் ( இது சீனத்துளசி ஆகும். சர்க்கரைக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படுகிறது)

நான்கில் ஒரு பங்கு – இலவங்கப்பட்டை தூள்

பாலை அது பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும். பிறகு அதில் ஸ்டேவியா சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து பால் குளிரவைக்கவும். இடையில் ஆப்பிளை தோலுரித்து நறுக்கி கொள்ளவும். முன்னதாக நறுக்கி வைக்க வேண்டாம். அப்படி செய்தால் அது பழுப்பு நிறமாகிவிடும்.

பிறகு ஆப்பிள் ,பாதாம் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை குளிர்ந்த பாலில் சேர்த்து கிளறவும். பிறகு குளிரவைத்து பரிமாறவும்.

சாக்லேட் மெளஸ்

டார்க் சாக்லேட் – 50 கிராம்

உப்பு சேர்த்த வெண்ணெய் அல்லது உப்பு சேர்க்காத வெண்ணெய் (இதனுடன் 1 சிட்டிகை உப்பு சேர்க்கவும்) – 15 கிராம்

கோக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்

தேங்காய் க்ரீம் ஸ்டேவியா – சுவைக்கேற்ப

இலவங்கப்பட்டை – கால் டீஸ்பூன்

மைக்ரோவேவ் அவனில் சாக்லேட் மற்றும் வெண்ணெய் உருக்கி இரண்டும் இணைத்து கலக்கவும்.

க்ரீம் மற்றும் கோகோபவுடர் மற்றும் ஸ்டேவியா ஒன்றாக கலந்து விடவும்.

பிறகு இதை சாக்லேட் மற்றும் வெண்ணெய் கலவையில் சேர்க்கவும்.

அனைத்தும் மென்மையாக ஆகும் வரை நன்றாக கலந்து விடவும். பிறகு கிண்ணத்தில் ஊற்றவும். இதன் மேல் பெர்ரி இலைகள் தூவி தேவையெனில் வைக்கலாம்.

குறைந்தபட்சம் 1 மணி நேரம் வரை குளிரவைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.

​கஜூர்ஜா அல்வா

கேரட் – 1 கிலோ

பால்- 1 லிட்டர்

ஸ்டேவியா – 2 டீஸ்பூன்

ஏலக்காய் – 4

குங்குமப்பூ இழை – 10

பாதாம் – 20

பிஸ்தா – 10

கேரட்டை துருவி தேவையெனில் நெய் சேர்த்து சூடாக்கவும். இதை 5 நிமிடங்கள் வரை அடுப்பில் மிதமான தீயில் வைக்கலாம். பிறகு பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிறகு இதில் ஏலபொடி கலந்து அவ்வபோது கைவிடாமல் கிளறி விடவும். 30 நிமிடங்கள் வரை அவ்வபோது கிளறி விடவும். பால் சற்று இருக்கும் போதே ஸ்டேவியாவை சேர்க்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்து பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும். பாதாம், பிஸ்தா இரண்டையும் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை தோலுரித்து பிறகு நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

​சாக்லேட் பிரவுனி

சாக்லேட் – 200 கிராம்

வெண்ணெய் – 100 கிராம்

பால் / தேங்காய்ப்பால் – அரை கப்

தேங்காய் மாவு – மூன்றில் ஒரு பங்கு

ரவை – மூன்றில் ஒரு பங்கு

சுத்திகரிக்கப்பட்ட மாவு – மூன்றில் ஒரு பங்கு

வறுத்த வால்நட் – அரை கப்

வெண்ணிலா எசன்ஸ்- 1 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்

ஸ்டேவியா – 2 டீஸ்பூன்

வாழைப்பழம் -1

அடுப்பை 180 டிகிரி செண்டிகிரேட் முன்கூட்டியே சூடாக்கவும். கேக் பெளலில் சிறிது வெண்ணெய் மற்றும் சிறிது மாவுடன் தடவி எடுக்கவும்.

பாலை நான் – ஸ்டிக் பாத்திரத்தில் சூடு வரை வரை சூடாக்கவும்.

பாத்திரத்தில் சாக்லேட் சேர்த்து சூடான பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து சாக்லேட் முழுமையாக உருகும் வரை நன்றாக கலக்கவும். பிறகு

வாழைப்பழம் எடுத்து மசித்து அதில் ஸ்டேவியாவை சேர்த்து வெண்ணிலா சாற்றை கலக்கவும். பிறகு உருகிய சாக்லேட் கலவையை கிண்ணத்தில் சேர்க்கவும்

சாக்லேட் கலவையில் அனைத்து வித மாவு மற்றும் பேக்கிங் பவுடரை சலித்து நன்றாக கலக்கவும். பிறகு இதை பெளலில் வைத்து சிறிது தட்டி, சூடாக்கப்பட்ட அடுப்பில் வைக்கவும்.

220 முதல் 240 டிகிரியில் 12 நிமிடங்கள் வைத்து டூத் பிக் மூலம் குத்தி எடுங்கள். அவை ஒட்டாமல் இருக்க வேண்டும். பிறகு அவனிலிருந்து பெளலை எடுத்து அறை வெப்பநிலைக்கு வந்ததும் அதை வெளியே எடுத்துதுண்டுகளாக்கி பரிமாறவும்.

​சந்தேஷ்

க்ரீம் பால் – 1 லிட்டர்

எலுமிச்சை – 2

ஏலக்காய் – 5

குங்குமப்பூ – 20-25 இழைகள்

பிஸ்தா – 12

அடிகனமான அல்லது அடிப்பாகம் உள்ள பாத்திரத்தில் பாலை எடுத்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

பால் மென்மையாக கொதித்ததும் தீயை அணைத்து பாலை ஆறவிடவும். பால் வெதுவெதுப்பாக மாறியதும் பாலில் எலுமிச்சை நீரை சிறிய பகுதிகளாக சேர்க்கவும். தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும் பால் உறையும் போது அதை நிறுத்தவும்.

இந்த கலவையை மஸ்லின் துணி மூலம் வடிகட்டி அதன் மீது சிறிது குளிர்ந்த நீரை ஊற்றிவிடவும். பிறகுதுணியை இறுக்கமாக பிடித்து, அதிலிருக்கும் நீர் மொத்தமாக பிழிந்து எடுக்கவும்.

இதை வேறொரு தட்டில் மாற்றி மசிக்கவும். மென்மையாக 5 முதல் 6 நிமிடங்கள் வரை பிசைந்துகொண்டே இருங்கள். பிறகு சிறிது ஏலக்காய் தூள், மெல்லியதாக நறுக்கி பிஸ்தாவை மெல்லியதாக நறுக்கவும். பிறகு குங்குமப்பூ மற்றும் ஸ்டேவியா கலந்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையிலிருந்து சிறு கட்டியை கிள்ளி ஓவல் வடிவில் உருட்டி பேடாவாக தட்டி எடுக்கவும். பிறகு அதை தட்டில் வைத்து சில நறுக்கிய பிஸ்தாக்களால் அலங்கரித்து சாப்பிடவும்.